Cinema
அந்த இடத்தில் பாம்பு உருவத்தை பச்சை குத்திய நடிகை ஓவியா; அலறும் ரசிகர்கள்…!!
களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக பிரபலமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
மலையாள மொழியில் வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஓவியா, தமிழில் நாளை நமதே படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால், 2010ம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் ஓவியாவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்தது.
தனது இயல்பான நடிப்பால் ஏகப்பட்ட படங்களில் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார் நடிகை ஓவியா. ஆனால், அவர் நடித்த சில படங்களைத் தவிர பல படங்கள் ஓடவே இல்லை. இதனால், கோலிவுட் முதல் மற்ற சினிமா உலகிலும் அவரது மார்க்கெட் சரியத் தொடங்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற ஒன்று ஃபேமஸ் ஆனதே ஓவியா என்ற பெண்ணால் தான். ஓவியாவுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்த ஒரு படம்கூட ரசிகர்களை கவரவில்லை.
அதிலும் 90ML படம் எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு பெரிய அளவில் ஓவியா தலைகாட்டவில்லை. அதுமட்டுமில்லாமல் ஆரவ் என்பவருடன் காதல் வளர்த்து வந்தார் ஓவியா.
திடீரென ஓவியாவை கழட்டிவிட்டு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இதனால் மனமுடைந்து கொஞ்ச நாட்களாக சமூக வலைதள பக்கம் வராமல் இருந்தார் ஓவியா.
பின்னர் அவ்வப்போது பட வாய்ப்புகளுக்காக படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதனை பலரும் லைக் செய்து வருகின்றனர்
