Cinema
“என் மகனைப் பார்த்து 4 மாசமாச்சு; என்னிடம் பேசுறதே இல்லை”- பிக் பாஸ் நிகழ்ச்சியில் க.ண்ணீர் விட்டு க.த.றிய தாமரைச்செல்வி…!!
பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம் பெற்ற ஒரு நிகழ்ச்சி.
இதுவரை வெளிவந்த 4 சீசன்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நான்கு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.
இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து விலகினார்.
இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
வரும் வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது.
இதையடுத்து பிக் பாஸ் தமிழ் 5 போட்டியிலிருந்து வெளியேறும் முதல் நபர் யாரென்று தெரிந்து விடும்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ‘ஒரு கத சொல்லட்டுமா சார்?’ டாஸ்க்கில் தாமரைச்செல்வி பேசுகிறார்.
தனது மகன் தங்கள் வீட்டுக்கு வராமல் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், நேரிலும் சரி, தொலைபேசியிலும் சரி தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவனைப் பார்த்து 4 மாதங்கள் ஆகிறது என்றும் கூறி அ.ழுகி.றார்.
இந்த நிகழ்ச்சியில் இதை சொல்லாவிட்டால், அம்மா படும் கஷ்டம் மகனுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால் தான் என கூறுகிறார்.
