World News
ஒரே ஒரு மீன் விற்று பல லட்சங்களை அள்ளிய மீனவர்…!! அம்மாடியோ இத்தனை லட்சத்திற்கு விலை போனதா????அப்படி என்ன அந்த மீனின் ஸ்பெஷல்..??
மேற்கு வங்க மாநிலம் சுந்தர்பன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிகாஷ் பர்மன்.
மீன் பிடிக்கும் தொழில் செய்து வரும் இவர் சில தினங்களுக்கு முன் ஆற்று பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது.
அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து வலையில் சிக்கிய அந்த மீனை கஷ்டப்பட்டு படகிற்கு மீட்டுள்ளனர்.
படகிற்கு வந்ததும் அந்த மீனை பார்த்த அவர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த மீன் “டெலியா போலா” என்ற மீன் வகையை சேர்ந்த மீன் என்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டனர்.
இது மிகப்பெரிய வகை மீன் இந்த மீனை அவர் மொத்த விற்பனை மார்கெட்டிற்கு கொண்டு வந்தபோது மார்கெட்டில் அந்த மீன வாங்க பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இறுதியாக சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த மீன் ரூ36 லட்சத்திற்கு விற்பனையானது கொல்கத்தாவைச் சேர்ந்த கேஎம்பி என்ற நிறுவனம் இந்த மீனை விலைக்கு வாங்கியது.
இந்த மீன் கிலோ ரூ49,300 என்ற விலையில் விற்பனையாகியுள்ளது.
இதேவேளை, இந்த மீனின் வ.யி.ற்றில் இருந்த ஒரு விதமான மருத்துவ குணம், பல விதமான மருந்துகளை தயாரிக்க உதவுமாம்.
அதனால் அதிக விலையில் விற்பனையாகியுள்ளது.
