Viral News
வழுக்கை தலைக்கு விக் வைத்து இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து வந்த இளைஞர்; இறுதியில் நடந்த விபரீதம்..!!
வழுக்கை தலைக்கு விக் வைத்து இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து பணம், நகைகளை சுருட்டிய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டம் துணி மண்டலம் ஹம்சவரம் கிராமத்தை சேர்ந்த சேக் முகமது ரபி என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கார்த்திக் வர்மா’ என்ற போலி பெயரில் கணக்கு தொடங்கியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் தொடர்பில் பல பெண்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
தான் பழகி வந்த
இளம் பெண்களிடம் தான் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிவந்த என்ஆர்ஐ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இளம்பெண்களை கவர்வதற்காக, தனது வழுக்கை தலைக்கு விக் வைத்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் தன்னிடம் நெருங்கிய இளம் பெண்களை குறிவைத்து அவர்களில் பொருளாதார ரீதியாக வசதியானவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்தது வந்துள்ளார்.
மேலும், அவர்களிடமிருந்து பணம், நகைகள் ஆகியவற்றை கேட்டு வாங்கி சுருட்டி சுகபோகமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
சுகமாக வாழ்வதற்கு
இது எளிதாக பணம் சம்பாதிக்க சிறந்த வழியாக அவருக்கு தோன்றியது.
எனவே தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பல பெண்களை ஏ.மாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஹைதராபாதில் உள்ள கே.பி.எஸ்.சி காலனியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு கார்த்திக் வர்மா என்ற பெயரில் அறிமுகமாகிய நபர் நட்பாக பழகி ந.கை, 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார் என்று எஸ் ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த எஸ் ஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் சேக் முகமது ரபியை மடக்கி பிடித்தனர்.
கைதான சேக் முகமது ரபிக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேக் முகமது ரபி இதற்கு முன்னர் ஆந்திராவின் பல்வேறு ஊர்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடத்திய விசாரணையில் சேக் முகமது ரஃபி மேலும் 4 பெண்களிடம் இதே போன்ற மோ.சடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
