Connect with us

    ஆஹா..! இது தான் சார் கடவுள் மனசு..!! மனநோயாளிகளை தேடிச் சென்று உணவு ஊட்டும் கூலி தொழிலாளி…!!

    Viral News

    ஆஹா..! இது தான் சார் கடவுள் மனசு..!! மனநோயாளிகளை தேடிச் சென்று உணவு ஊட்டும் கூலி தொழிலாளி…!!

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். சாதாரண கூலித் தொழிலாளி.

    தனக்கு அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.

    ஆனாலும் மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஐயப்பனின் மனதில் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருந்தது.

    தினமும் வேலைக்கு சென்று வரும் நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் மனநோயாளிகள் நிலையை பார்த்ததும் ஐயப்பன் கண்களில் இருந்து தானாக நீர் வழிந்தது.

    இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவரது மனம் துடித்தது.

    இதனை தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் உடனடியாக களத்தில் இறங்கினார் அவர்.

    அந்த பகுதிகளுக்கு உள்ள மனநோயாளிகளுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பணியை செய்ய தொடங்கினர் ஐயப்பன்.

    சொற்ப வருமானம் உள்ளதே என்று கவலைப்படாமல் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சிறு பகுதியை ஒதுக்கி மனநோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

    குழந்தைக்கு நிகரான மனநோயாளிகளை கண்டால் சிலர் பத்து அடி பாய்ந்து ஓடுவார்கள்.

    ஒரு சிலர் அவர்களை அடித்து துரத்துவார்கள். ஆனால் மனநோயாளிகளை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே தேடி ஓடிச் சென்று உணவு, துணி, மணிகளை வழங்குகிறார் இந்த மனித கடவுள்.

    மேலும் கடமைக்கு வெறுமனே உணவினை வழங்கி விட்டு செல்லாமல், ஒரு தாய் குழந்தையை பராமரிப்பதை போன்று தனது கையினால் கள்ளம் கபடமில்லாத மனநோயாளிகளின் வயிறு நிரம்பும்வரை ஊட்டிவிட்டுதான் செல்வார்.

    மனநோயாளிகளின் குழந்தை தனமான சிரிப்பை கண்டு ஐயப்பனின் மனது தானாக நிரம்பி விடுகிறது.

    ஒரு கூலி தொழிலாளியின் இந்த உன்னதமான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    நாமும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் மக்களுக்கு கொடுத்துள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!