Connect with us

    தான் பெற்ற 7 பிள்ளைகளும் தன்னை கைவிட்டதால், சாலையோரத்தில் பழ வியாபாரம் செய்யும் 101 வயது மூதாட்டி..!

    Kulanthaiammal

    Tamil News

    தான் பெற்ற 7 பிள்ளைகளும் தன்னை கைவிட்டதால், சாலையோரத்தில் பழ வியாபாரம் செய்யும் 101 வயது மூதாட்டி..!

    தான் வளர்த்த 7 பிள்ளைகள் தன்னை பராமரிக்காமல் கைவிட்டதால், சாலையோரத்தில் பழக்கடை அமைத்து உழைத்து வாழ்கிறார் 101 வயதான குழந்தையம்மாள் என்ற பாட்டி.

    Kulanthaiammal

    தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகே உள்ள பொட்டுவாஞ்சாவடியைச் சார்ந்தவர் குழந்தையம்மாள்.

    இவர் நடைபாதையில் பழம் விற்றுதான் பிழப்பு நடத்தி வருகிறார். இவரின் வயது 101.

    இவருக்கு 17 வயதிலேயே ஆரோக்கியசாமி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

    ஆரோக்கியசாமி- குழந்தையம்மாள் தம்பதிகளுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள்.மொத்தம் 7 குழந்தைகள் உள்ளார்கள் .

    கூலி வேலைக்குச் சென்றாலும் ஆரோக்கியசாமி மகன்கள் மற்றும் மகள்களை நன்றாக படிக்க வைத்துள்ளார்.

    மேலும் மகள்களுக்கு 50 சவரன் நகை போட்டு திருமணமும் செய்து வைத்துள்ளார்.

    ஆரோக்கியசாமி
    இ றந்துபோன பின்னர் குழந்தையம்மாளை தங்களது வீட்டில் தங்கவைக்க மகன்களும் மகள்களும் பெரிய அளவில் ச ண்டை இட்டுக் கொண்டுள்ளனர்.

    இதனால் மனம் நொந்த குழந்தையம்மாள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

    அதன்பின்னர் பொட்டுவாஞ்சாவடி வந்த அவர், பழங்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்யத் துவங்கியுள்ளார்.

    56 வருடங்களாக பழங்களை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் தான் சாப்பிட்டு வருகிறார்.

    மேலும் அவர் தன்னுடைய தள்ளுவண்டியில்தான் மழை, குளிர் மற்றும் கோடை காலங்களில் தங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    இந்த செய்தி காண்போரைக் கலங்கச் செய்தாலும், வீர தமிழச்சியான குழந்தையம்மாள் வைரக்கியத்தோடு நான் உயிரோடு இருக்கும் வரை நிச்சயம் உழைப்பேன் என்று சொல்கிறார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!