Tamil News
8- ம் வகுப்பு மாணவியை கட்டிப் போட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்; அதிர்ச்சி சம்பவம்…!
சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2வது மகளுக்கு 13 வயதும், 3-வது மகளுக்கு 11 வயதும் ஆகிறது.
இவர்களின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
2-வது மகளான 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவருடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்குச் சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்தனர்.
பின்னர் கதவை பூட்டிக்கொண்டு மாணவியை கட்டிப்போட்டனர்.
பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார்.
இதையடுத்து 4 மாணவர்களும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் 4 பேரும் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையால் அதிர்ந்துபோன மாணவி இது பற்றி யாரிடமும் சொல்லாமலேயே இருந்தார்.
இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து முதலில் தனது தங்கையிடம் நடந்த சம்பவத்தை பற்றி தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்த விஷயம் தாய்க்கு தெரிய வந்துள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்.
அவர் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக மாணவியின் தாய் ராயபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் காசிமேடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
