Viral News
தனக்கு கொடுக்காமல், குழந்தை க்கு முதலில் பால் கொடுத்ததற்காக மனைவிக்கு முத்தலாக் ( Triple Talaq) கொடுத்த கணவன்..!!
தனக்கு பால் கொடுக்காமல், குழந்தைகளுக்கு முதலில் பால் கொடுத்ததற்காக, தனது மனைவிக்கு முத்தலாக் (Triple talaq) கொடுத்த கணவன் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கரன்ஞ்ச் என்ற பகுதியை சேர்ந்த இஸ்லாமிய 31 வயதான இளம்பெண் ஒருவரை அவரது கணவர் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
அப்பெண்ணின் மாமியார், மாமனார் மற்றும் கணவர் கடந்த 2021 டிசம்பரில் தனது பெற்றோரிடம் இருந்து ரூ. 1 லட்சம் வாங்கி வருமாறு கேட்டனர்.
இதற்காக அவர்கள் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் 5 வயது மகள் பால் மற்றும் தின்பண்டங்களைக் கேட்டுள்ளார்.
அவர் தனது குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தபோது, அதே நேரத்தில் அவரது கணவரும் பால் கேட்டார்.
ஆனால், முதலில் தன் மகளுக்கு பால் கொடுத்துள்ளார் அந்த பெண்.
இது அவரது கணவனுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது.
மனைவி தாமதமாக பால் கொடுத்ததால் மனமுடைந்த கணவர், உறவினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
தனது கணவர், தனது குழந்தைகளுக்கு முதன்முதலில் பால் வழங்கியதற்கு முத்தலாக் கூறியதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்
பாதிக்கப்பட்ட பெண், தனது திருமணத்தில் பெற்ற பரிசுகள் அனைத்தும் நதியாத்தில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதற்காகவும், வரதட்சணைக்காகவும் தனது மாமியார் தன்னை சித்திரவதை செய்யத் தொடங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது