Connect with us

    வேறொரு பெண்ணுடன் தொடர்பு, கணவரின் ஆணுறுப்பின் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி..!

    Hot water

    Tamil News

    வேறொரு பெண்ணுடன் தொடர்பு, கணவரின் ஆணுறுப்பின் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி..!

    வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் ஆணுறுப்பின் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவியின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Hot water

    காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(32).

    இவருக்கும் பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

    தங்கராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதிகளின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசத் தொடங்கியது.

    கணவருக்கு அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பிரியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கணவன் மனைவிக்கிடையே கடந்த ஒரு மாதமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வருவதை அவர் பார்த்துள்ளார்.

    இந்த நிலையில் கணவனை பழிவாங்க நினைத்த மனைவி பிரியா, வீட்டில் தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது வெந்நீரை கொதிக்க வைத்து அதனை கணவரின் ஆணுறுப்பின் மீது ஊற்றியுள்ளார்.

    அப்போது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், 40% த்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கணவனின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி பழி வாங்குவதற்காக கொதிக்கும் வெந்நீரை ஆணுறுப்பின் மீது ஊற்றிய கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!