Tamil News
திருப்பூர் சப்-கலெக்டராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நாராயணன் பொறுப்பேற்பு..!
நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1980 மற்றும் 1990-களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என கலவையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர் சின்னி ஜெயந்த்.
தற்போது விஜய் சேதுபதின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார்.
அதன்பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி சப் கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்ற சப்- கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில் திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் நியமனம் செய்யப்பட்டார்.
புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்- கலெக்டராக இன்று பொறுப்பேற்றார்.
