Connect with us

    “ரெண்டு நாளா என் பொண்டாட்டி பிரஷ் வச்சு தான் பல் வெளக்குறேன்” – தயாரிப்பாளர் ரவீந்திரன் ஷாக் பேட்டி..!!

    Actress Mahalakshmi

    Cinema

    “ரெண்டு நாளா என் பொண்டாட்டி பிரஷ் வச்சு தான் பல் வெளக்குறேன்” – தயாரிப்பாளர் ரவீந்திரன் ஷாக் பேட்டி..!!

    சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

    Mahalakshmi

    இவர்களது திருமணம் திருப்பதியில் ரகசியமாக நடந்தேறியது.

    இவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகிய நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை மகாலட்சுமி.

    ‘அரசி’ சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.

    தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில், நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர்.

    மகாலட்சுமிக்கு ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

    அனிலிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

    தற்போது இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இத்தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மகாலட்சுமியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    நடிகை மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் ரவீந்திரனோடு தான் திருமணம் செய்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்

    தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிபிடத்தக்கது.

    இவர் தமிழில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

    அதே போல், சில படங்களை விநியோகம் செய்து வருவது மட்டும் இன்றி, நடிகராகவும் உள்ளார்.

    திருமணத்திற்கு பின்னர், தங்களின் திருமண புகைப்படங்களை இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருமணத்திற்கு பின் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தனர்.

    Actress Mahalakshmi

    அதில், திருமணத்திற்கு பின் தனது மனைவி மகாலட்சுமியின் பிரஷ் எடுத்து தான் பல் விளக்குகிறேன் என ஓப்பனாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

    இவரின் இந்த பேட்டி நெட்டிசன்களிடையே பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

     

     

     

     

    அந்த வகையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் கேப்ஷனில், “நீங்கள் என் இதயத்தை திருடி விட்டீர்கள்.

    ஆனால், அதை நீங்களே வைத்திருக்க அனுமதிக்கிறேன்” என குறிப்பிடடிருந்தார்.

    இதன் பின்னர், மனைவியின் கேப்ஷனுக்கு பதிலளித்த ரவீந்தர், அதன் கமெண்ட்டில், “நீ அதை மறந்து விட்டாய் என நான் நினைத்தேன்.

    நான் என்னுடைய இதயத்தை பதிலாக வைத்துள்ளேன். அதன் வேகத்தை சரி பார்த்துக் கொள் பொண்டாட்டி” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!