Uncategorized
“கல்யாணம் ஆகி முதலிரவே நடக்கல; ஆனா, என் பொண்டாட்டி இப்ப கர்ப்பமா இருக்கா” – காவல் நிலையத்தில் கதறிய இளைஞர்..!
திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே தனது மனைவி கர்ப்பமாகியுள்ள சம்பவம் அப்பெண்ணின் கணவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சீனிவாசராவ்.
பி.டெக் வரை படித்துள்ள இவர் தற்போது மோட்டோ கண்ட்ரோலர் ஆக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சீனிவாச ராவ் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன் ஆவார்.
இவரது தந்தை வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஒரே மகன் என்பதால் தனது மகனுக்கு அதிக பெருட்செலவில் பிரியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து மிக பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தனர்.
சீனிவாசராவ் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது,
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.
ரிசப்ஷன் முடிந்தவுடனே மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார் தாய் ஸ்ரீலட்சுமி.
இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற விபரம் சீனிவாசராவுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார் சீனிவாசராவ்.
திருமணம் ஆகி இதுவரை தங்களுக்கிடையில் முறையாக முதலிரவு கூட நடக்காத நிலையில் இது குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீனிவாசராவ் தெரிவித்திருப்பதாவது;
எங்களுக்கு திருமணம் முடிந்தவுடன் பெரியவர்கள் குண்டூரில் எங்களுக்கு வீடு வாடகை பார்த்து குடியமர்த்தினார்,
அப்போது அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் மட்டும் எனது மனைவி தங்கியிருந்தார்.
மறுநாள் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக சீனிவாசராவ் கூறியுள்ளார்.
இதற்கிடையில் எப்படி தன் மனைவி கர்ப்பமானார் என்று அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீனிவாச ராவ் தன்னை கடுமையாக தாக்கி வரதட்சணை கொடுமை செய்ததாக பிரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், தன்னிடம் 10 லட்ச ரூபாய் கேட்டதாகவும், தனக்கு ஏற்கனவே வேறோருவருடன் நிச்சயம் ஆனது கணவருக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிரியா விஆர்ஓவாக பணியாற்றிய அதே கிராமத்தில் உள்ள விமானப்படை ஊழியருடன் பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் நிச்சயித்தபடி திருமணம் நடைபெறவில்லை.
இந்த விஷயத்தை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக சீனிவாசராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
வேறொருவருடன் குடும்பம் நடத்தியவரை ஸ்ரீலட்சுமி தனது தலையில் கட்டிவைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
தன்னை ஏமாற்றி மோசடி செய்த தாய் மகள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
