Tamil News
தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல்; தினமும் உல்லாசம்; தடையாக இருந்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்..!!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முன்னாள் ராணுவ வீரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றொருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
ஆரணியை அடுத்துள்ள மொழுகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வெற்றிவேல் (42). இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா்.
வெற்றிவேல் வியாழக்கிழமை காலை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
இதையடுத்து, வெற்றிவேலின் தந்தை சின்னப்பையன், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக வகையில் பதிலளித்துள்ளார்.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதில், கடந்த 2016ல் வெற்றிவேலின் புதுவீடு கட்டும் பணியை அவரது தங்கை கணவர் நாகராஜ் செய்துள்ளார்.
அப்போது, அவருக்கும் ரேவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அறிந்த வெற்றிவேல் மனைவி கண்டித்துள்ளார்.
ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு வெற்றிவேல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்துள்ளார்.
கடந்த மே மாதம் கள்ளக்காதலை கைவிடும்படி ரேவதியை அடித்துள்ளார். இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
ரேவதி தான் திருந்தி விட்டது போல் நடித்து வீட்டிற்கு வந்துள்ளார். கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.
நள்ளிரவில் கள்ளக்காதலன் நாகராஜ், பாஜக பிரமுகர் ராஜேஷ், ரேவதி ஆகிய 3 பேர் சேர்ந்து, வெற்றிவேலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
மறுநாள் கணவர் மயக்க நிலையில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்தார்.
அவர்கள் ஆரணி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதுதான் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
