Tamil News
FREE FIRE கேம் விளையாட செல்போ ன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
கேம் விளையாட செல்போன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே, கிணத்து க் க டவு கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி.
இவருக்கு கிட்டன் அம்மாள் என்ற ம னை வியும், முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மா என்ற மூன்று மகள்களும், ஈஸ்வரன்,(13) அர்ஜுனன்(12) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நி லை யில் பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சி க் கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநி லை ப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பள்ளியில் அண்ணன் ஈஸ்வரன் படித்துவருகிறான்.
நேற்று மாலை வ ழ க் கம் போல் இருவரும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்து ஃப்ரி-ஃபயர் (free-fire)கேம் விளையாட செல்போ ன் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஈஸ்வரன் செல்போ ன் தர மறுத்ததால், கோபத்தில் திடீரென வீட்டுக்குள் சென்று அர்ஜுனன் தூ க் கு போட்டு த ற் கொ லை செய்து கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அர்ஜுனன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட செல் போன் தரமறுத்ததால் சிறுவன் தூக்கிட்டு த ற்கொ லை செய்துகொண்ட ச ம் ப வம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்ப டு த்தியுள்ளது.
