Connect with us

    போலீஸ் வேலைக்கு சேர்ந்தவுடன் பேச மறுத்த காதலன்; அதிர்ச்சியில் காதலி எடுத்த விபரீத முடிவு…!!

    Tamil News

    போலீஸ் வேலைக்கு சேர்ந்தவுடன் பேச மறுத்த காதலன்; அதிர்ச்சியில் காதலி எடுத்த விபரீத முடிவு…!!

    நாகர்கோவிலில் காதலன் போலீஸ் வேலைக்கு தேர்வானதால், காதலியுடன் பேச மறுத்ததால், விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்த போது, தன்னுடன் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து உள்ளார்.

    இதனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அவர்கள் இருவரும் செல்போன் மூலமாக தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில், அந்த இளைஞர் சமீபத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வானார்.

    இதனால் காதல் ஜோடி பெரிதும் மகிழ்ந்தது.

    இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் அந்த இளைஞரின் வீட்டுக்கு தெரிய வந்தது. இதனால், தங்களது மகனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    அதைத்தொடர்ந்து தன் காதலியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் அந்த இளைஞர் தவிர்த்து வந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அப்போது இளம்பெண்ணை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

    பின்னர் இதுதொடர்பாக இளம்பெண் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த இளைஞரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண்ணை சில மாதங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞர் உறுதி அளித்தார்.

    இதனால் அப்பெண் சமாதானம் அடைந்தார்.

    அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்களது காதல் தொடர்ந்தது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு மீண்டும் தனது காதலியுடன் பேசுவதை அந்த இளைஞர் தவிர்த்து வந்தார்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னை, தன் காதலனுடன் சேர்த்து வைக்கும்படி கூறியிருந்தார்.

    அதன்பேரில் அந்த இளைஞரையும், இளம்பெண்ணையும் மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.

    அதன்படி இருவரும் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர்.

    ஆனால் போலீஸ் நிலையம் முன் நின்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென ஒழுகினசேரியில் இருந்து வடசேரி செல்லும் ரோட்டுக்கு ஓடியதாகவும், அங்குள்ள பெட்டிக்கடை அருகே இளம்பெண் விஷம் குடித்ததாகவும், அதோடு விஷ பாட்டிலுடன் போலீஸ் நிலையத்துக்கும் வந்துள்ளார்.

    அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    காதலன் பேச மறுத்ததால் விஷம் குடித்து விட்டு இளம்பெண் போலீஸ் நிலையத்துக்கு வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!