Viral News
விருப்பம் இல்லாத பையனுடன் திருமண ஏற்பாடு; பரிசு தருவதாக கூறி மணமகன் கண்ணை கட்டி கழுத்தை அறுத்த மணப்பெண்…!!
விருப்பம் இல்லாத பையனுடன் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்ததால், கிப்ட் கொடுப்பதாக கூறி மணமகன் கண்ணை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மணமகளை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடு குளமங்கலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமாநாயுடு (வயது 28).
ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார்.
ராமா நாயுடு வுக்கும் ராதிக மாட்டம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணம் மே 26ஆம் தேதி நடைபெறவிருந்தது
இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
இருப்பினும் அவரது பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகளில் செய்து வந்தனர்.
புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்று இருந்தனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புஷ்பா மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக வரவழைத்தார்.
மணமகன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அங்கு இரண்டு பேரும் சில மணி நேரங்களை செலவிட்டனர்.
அதன் பின்னர் ‘உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க போகிறேன். எனவே உன் கண்ணை இப்போது கட்டுகிறேன்’ என்று கூறிய புஷ்பா ராமகிருஷ்ணன் கண்ணை தன்னுடைய துப்பட்டாவால் கட்டினார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ய முயன்றார்.
மணமகனின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இந்த நிலையில் அலறித் துடித்த ராமகிருஷ்ணாவை பார்த்து சற்று மனம் மாறிய புஷ்பா அவரை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
மருத்துவமனையில் டாக்டர்களிடம் நாங்கள் இரண்டு பேரும் மலை மீது உள்ள பாபா கோவிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது கால் தவறி ராமகிருஷ்ணா கீழே விழுந்துவிட்டார். எனவே காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து புதிய பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
