Viral News
முதலிரவு அறைக்குள் உற்சாகத்துடன் இருந்த புதுமாப்பிள்ளை திடீரென உயிரிழந்த பரிதாபம்; கதறிய மனைவி..!
ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவு அறைக்குள் சென்ற துளசி பிரசாத் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதலிரவு என்பதால் மணமகன் ஏதேனும் மாதிரி உட்கொண்டாரா? என்ற மருத்துவ பரிசோதனையும் நடந்து வருகிறது.
