Viral News
கணவர் பிரிந்து சென்ற போதிலும், மனம் தளராமல் கைக்குழந்தையை மடியில் கட்டிக் கொண்டு ஆட்டோ ஓட்டி சாதிக்கும் தன்னம்பிக்கை பெண்..!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த 27 வயது பெண் சன்ச்சல் சர்மா.
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில், மிகவும் சவாலான ஒரு வாழ்க்கையை சன்ச்சல் வாழ்ந்து வருகிறார்.
நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்டர் 59 வரை இ ரிக்சா ஓட்டி வருகிறார் சன்ச்சல்.
அதுவும் தனியாளாக இல்லாமல், தோளுடன் கூடிய தூளியில் தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் இ ரிக்சா ஓட்டி வருவது தான் பலரையும் சன்ச்சல் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டும் சன்ச்சல் சர்மாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த பின் அவரது கணவர் சன்ச்சல் சர்மாவை மிகவும் கடுமையாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால், அவருடன் வாழ வேண்டாம் என முடிவு செய்த சன்ச்சல், குழந்தையுடன் தாய் வீட்டிற்கே வந்து விட்டார்.
கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, சஞ்சல் ஷர்மா தனது தாயுடன் அவர்களின் ஒரு அறை வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
அம்மா கைவண்டியில் வெங்காயம் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
குழந்தைக்கு என்ன நடக்கும், அவரை எப்படி கவனித்துக்கொள்வீர்கள்? சவால்கள் இருந்தன.
ஆனால் சஞ்சலுக்கு தனக்கென ஒரு நோக்கம் இருந்தது. தன் மகனுக்கு தன்னைப் போன்ற ஒரு வாழ்க்கையை அவள் கொடுக்க மாட்டாள் என்பதே நோக்கம்.
வேலை தேடத் தொடங்கியபோது தனது மகன் அங்குஷ்க்கு ஒன்றரை மாத வயதுதான்.
ஆனால், எனக்கு வேலை கிடைத்தாலும், குழந்தையை எங்கே விட்டுச் செல்வது என்பதுதான் பிரச்சனை.
குழந்தையை ஒரு குழந்தை காப்பகத்திலோ அல்லது தினப்பராமரிப்பு மையத்திலோ வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
பிறகு சிறு துணிக்கடையைத் திறந்தால் குழந்தையை யாருடைய கையிலும் விட வேண்டியதில்லை என்று நினைத்தேன்.
அந்தக் கடையிலேயே குழந்தையைப் பார்த்துக் கொள்வார். ஆனால் கடை திறக்க பணம் எங்கிருந்து வரும்? எப்படியிருந்தாலும், தோல்வியை விட சிறந்த சவால் என்ன.
இறுதியில் சஞ்சல் வேலைக்குப் பதிலாக இ-ரிக்சாவை ஓட்ட முடிவு செய்தார்.
இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் சன்ச்சலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று தவணை முறையில் ஆட்டோ கொடுத்துள்ளது.
இதில், பிழைப்பு நடத்தி வரும் சன்ச்சல், ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.
குழந்தையை தோளில் சுமந்த படி சன்ச்சல் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், தாய்க்கு தொந்தரவு எதுவும் கொடுக்காமல், சிரித்த முகத்தில் குழந்தை இருப்பது வாடிக்கையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
சன்ச்சலுக்கு மூன்று சகோதரிகள் உள்ள நிலையில், அனைவரும் திருமணமாகி கணவர்களுடன் சுற்றுப்புற இடங்களில் வசித்து வருகின்றனர்.
தனது குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை என்பதால், கூடவே எடுத்துக் கொண்டு வேலை பார்த்து வருகிறார் சன்ச்சல்.
காலையில் இ ரிக்சாவுடன் புறப்படும் சன்ச்சல், பின் மதியம் வீடு திரும்புகிறார். குழந்தையை குளிப்பாட்டி உணவளித்த பின், மீண்டும் இ ரிக்ஷா ஓட்ட சென்று மாலையில் மீண்டும் வீடு திரும்புகிறார்.
கணவரை பிரிந்து வாழும் பெண், கையில் குழந்தையுடன் மனம் தளராது அதன் எதிர்காலத்திற்காக உழைத்து வரும் விஷயம், பலரையும் மனம் உருக வைத்துள்ளது. பெண்ணின் மன தைரியத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
