Tamil News
கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி..!
கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 41). இவரது மனைவி சசிகலா(38).
தொழில் அதிபரான சதிஷ்குமாருக்கு, சமீபத்தில் தான் செய்து வந்த தொழிலில் கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடன் அளவுக்கு மீறி சென்றது. இதன் காரணமாக பெரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மாம்பலம் ரெயில் நிலையம் 4-வது நடைமேடை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அதிக கடன் தொல்லையால் சதிஷ்குமார் மற்றும் அவரது மனைவி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
