Connect with us

    திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பைக் பரிசு வழங்கி அசத்திய மணமக்கள்..!

    Couple gave bike

    Tamil News

    திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பைக் பரிசு வழங்கி அசத்திய மணமக்கள்..!

    மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பைக் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Couple gave bike

    மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் – ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர் ஒருவருக்கு குலுக்கல் முறையில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டி என்னும் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் தெரிவித்திருந்தனர்.

    இதனடிப்படையில் திருமண வீட்டிற்கு வருகை தந்த அனைவரும் தங்களது பெயர்களை எழுதி டோக்கன் கொடுத்தனர் .

    பின்பு மணமக்கள் முன்னிலையில் டோக்கன்கள் குலுக்கப்பட்டது.

    அப்போது திருமணத்திற்கு வந்த மதுரை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த அக்கிம் என்பவருக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த சம்பவம் மதுரையில் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!