Connect with us

    67 வயது தந்தைக்கு, மகள்கள் செய்து வைத்த 5-வது திருமணம்..!

    5th marriage

    World News

    67 வயது தந்தைக்கு, மகள்கள் செய்து வைத்த 5-வது திருமணம்..!

    67 வயதான தங்களது தந்தைக்கு, மகள்கள் 5வது திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    5th marriage

    பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சவுகத்(67). இவருக்கு 4 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.

    அதன் மூலம் அவருக்கு பத்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    மேலும், இவருக்கு 40 பேரக்குழந்தைகள் மற்றும் 11 மருமகள்கள் உள்பட மொத்தம் 62 பேர் உள்ளனர்.

    சௌகத்தின் 5-ஆவது திருமணத்திற்கு முன்பு, அவரின் எட்டு மகள்களுக்கும், 1 மகனுக்கும் திருமணமாகியிருந்தது.

    மேலும், தான் தனியாக இருக்க கூடாது என்பதற்காக தனது இரண்டு மகள்களும் 5-ஆவது மற்றும் கடைசி முறையாக திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாக சௌகாத் கூறியுள்ளார்.

    அதன்படி அவருக்கு 5-வது திருமணம் மகள்களின் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த திருமணம் குறித்து அவரது 5-வது மனைவி கூறுகையில், “எனக்கு உண்மையில் சந்தோஷமாகத் தான் உள்ளது.

    மற்ற பெண்களுக்குப் போல இல்லாமல், எனக்குத் திருமணத்தின் போதே பெரிய குடும்பம் கிடைத்துள்ளது. அதில் எனக்குச் சந்தோஷம் தான்” என்றார்.

    இவர்களின் திருமணம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!