Connect with us

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி..!!

    Father, son, daughter wins in election

    Politics

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி..!!

    ஸ்ரீவைகுண்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    Father, son, daughter wins in election

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன் பால கௌதம், 2வது வார்டில் மகள் மதுமிதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!