Tamil News
முன்னாள் காதலனை தற்போதைய காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி செய்த இளம்பெண்..!
காதல் கைகூடாத ஆத்திரத்தில் காதலியை ரயிலில் தள்ளி விடுவது, காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்வது என இன்றைய தலைமுறை சீரழிந்து வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுக்காதலனுடன் சேர்ந்து பழைய காதலனை கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின்.
டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கு அணக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் காதலாக மாறி ஒருவருக்கொருவர் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார்.
பிரவினும் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர்.
இதன் பிறகு இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழத் தொடங்கினர்.
இந்நிலையில் ஜெஸ்லின் திடீரென கடந்த ஒரு மாதமாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஜெனித்துடன் சுற்றத் தொடங்கினார்.
இதனை பிரவீன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் தான் தற்போது ஜெனிதை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பிரவீனிடம் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியால் மனமுடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார்.
அதற்கு ஜெஸ்லின் பரிசு பொருட்களை திரும்ப தருவதாக கூறி நேற்று முன்னாள் காதலன் பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரவின் இருசக்கர
வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில்
புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெஸ்லின் பிரவினை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பிரவினின் இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக பிரவினை தாக்க தொடங்கினர்.
இதை ஜெஸ்லின் புதிய காதலனுடன் ஜெனித்துடன் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில்
காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் 2 பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
முன்னாள் காதலனை காதலியே கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
