Connect with us

    முதலையை முத்தமிட்டு திருமணம் செய்த இளம்பெண்; காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மக்கள்..!!

    Girl married crocodile

    World News

    முதலையை முத்தமிட்டு திருமணம் செய்த இளம்பெண்; காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மக்கள்..!!

    மெக்சிகோ நாட்டில் இளம்பெண் ஒருவர் முதலையை திருமணம் செய்த நிகழ்வு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Girl married crocodile

    மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா.

    இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா.

    இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார்.

    ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது.

    கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் அந்த முதலைக்கு முத்தம் கொடுத்து இந்தத் திருமணத்தை அவர் செய்துள்ளார்.

    இந்தத் திருமணம் முடிந்த பிறகு முதலையை தோளில் சுமந்து மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    இந்தியாவில் மழைக்காக நடக்கும் சம்பிரதாயம் போல மெக்சிகோவின் பழங்குடி மக்கள் இந்தச் சடங்கை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கடைப்பிடித்துவருவதாக கூறப்படுகிறது.

    விக்டர் இத்திருமணம் குறித்து கூறுகையில்,

    “இயற்கையிடம் மழை, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வேண்டி பிரார்த்தனை செய்து இந்த சடங்கை செய்கிறோம்.

    இது காலம் காலமாக நாங்கள் பின்பற்றிவரும் நம்பிக்கை” என்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!