Viral News
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல்; தனது தாயுடன் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்த இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து எறிந்த மகள்…!
தனது தாயிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞரின் ஆண் உறுப்பை அப்பெண்ணின் மகள் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தனது தாயுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததால் அந்த பெண் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் பாப்டலா மாவட்டத்தில் தும்மலபாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டி.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குண்டூர் மாவட்டம் தெனாலியில் குடியேறினார்.
இந்நிலையில் இவருக்கும் ஐதாநகரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது
பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
ராமச்சந்திர ரெட்டி ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
அந்த இடத்திற்கு தனது கள்ளக்காதலியை வரவழைத்து அவருடன் மது அருந்திவிட்டு உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விஷயம் அந்தப் பெண்ணின் மகளுக்கு தெரிய வந்தது. அவர் தனது தாயை கடுமையாக கண்டித்தார்.
இதுதொடர்பாக தனது தாயாருடன் அடிக்கடி அவர் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் இதை அவரது தாய் பொருட்படுத்தவில்லை,
இதனால் அப்பெண்ணின் மகள் தனது தாயிடம் கள்ளத்தொடர்பு வைத்தி ருந்த ராமச்சந்திரன் ரெட்டியை நேரில் சந்தித்த தனது தாயுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு எச்சரித்தார்.
ஆனால் ராமச்சந்திர ரெட்டியும் அதைப் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் வழக்கம் போல ராமச்சந்திர ரெட்டியும் அந்தப் பெண்ணின் தாயும் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆவேசத்துடன் அங்கு வந்த அந்தப் பெண்ணின் மகள் கையில் வைத்திருந்த பிளேடால் ராமச்சந்திரனின் ஆணுறுப்பை அறுத்தார்.
அதில் ராமச்சந்திர ரெட்டி பலத்த காயம் அடைந்தார், ரத்தம் கொட்டியது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக குண்டூர் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் தெரிந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
