Viral News
கள்ளக்காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்ற மனைவியை விரட்டி பிடித்து நடுரோட்டில் அடித்து உதைத்த கணவன்; வைரல் வீடியோ..!
கள்ளக்காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்ற மனைவியை, அவரின் கணவர் விரட்டிச்சென்று பிடித்து நடுரோட்டில் அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென ஒருவர் நுழைந்தார்.
அவன் அந்த பகுதியில் கொஞ்சம் பணக்காரனாக இருந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு அவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு நாளடைவில் இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.
இவர்களுக்கிடையேயான கள்ளத்தொடர்பு ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை வீடு வெளியேறினார். கணவன் தனது மகளுடன் சென்று மனைவியை தேடினார்.
ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் மனைவி அவருடைய காதலருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிப்பதை கண்டார்.
பின்னாடியே சென்ற அவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தார். பின்னர், நடுரோட்டில் மனைவியை சரமாறியாக அடித்துள்ளார்.
மேலும் தனது மனைவியின் காதலரை பலமுறை அறைந்தார்.
இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஷிக்கந்த்ரா போலீசார் பெண்ணின் காதலர் மீது பொது மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
प्रेमी के साथ स्कूटी पर घूम रही पत्नी को पति ने पकड़ा, बीच सड़क पर हुआ हंगामा
मामला आगरा के सिकंदरा थाना क्षेत्र का है। पुलिस ने किया प्रेमी का 151 में चालान किया है। pic.twitter.com/I8uVwa3FpB
— Rahul Ahir (@rahulahir) September 12, 2022
