Connect with us

    மனைவி இறந்ததை மேளதாளம் முழங்க கொண்டாடிய கணவர்; காரணம் என்ன தெரியுமா..??

    Husband celebrate wife death

    Viral News

    மனைவி இறந்ததை மேளதாளம் முழங்க கொண்டாடிய கணவர்; காரணம் என்ன தெரியுமா..??

    குஜராத் மாநிலத்தில் மனைவி இறந்த பிறகு அவரது உடலை மேளதாளம் முழங்க அடக்கம் செய்த கணவரின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Husband celebrate wife death

    குஜராத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஸ்ரீநாத் சோலங்கி (30). இவருக்கும் மோனிகாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மோனிகா கர்ப்பமானார்.

    பின்னர், வளைகாப்பு முடிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.

    9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதன் பிறகு, குழந்தை வயிற்றில் இருந்தே இறநது எடுக்கப்பட்டது, தாயும் இறந்தார்

    பின்னர், ஸ்ரீநாத் தனது மனைவியின் இறுதிச் சடங்குகளை பிரமாண்டமாக நடத்தினார்.

    இதுபற்றி ஸ்ரீநாத் கூறுகையில், நானும் மோனிகாவும் கேலி பேசிக் கொண்டிருந்தபோது, நான் போன பிறகு நீ அழுவாய் என்று கேலியாகச் சொன்னேன்.

    அப்போது அவள், ‘நான் உனக்கு முன்னாலேயே போகிறேன்.

    ஆனால் நான் போனதும் எனக்காக அழாதே, எனது இறுதி ஊர்வலத்தில் டிரம்ஸ் மற்றும் பேண்ட் இசைக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    மோனிகா இறந்தபோது எனக்கு அது நினைவுக்கு வந்தது.

    அதனால் என் மனைவி மோனிகாவுக்கும் அவள் இறந்து பிறந்த குழந்தையின் இறுதிச் சடங்கிற்கும் இசைக்குழுவை நடத்த முடிவு செய்தேன்.

    திருமணமாகி சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம்.

    நாங்கள் எதிர்பார்த்தது போலவே கடவுள் நமக்கு ஒரு பெண் குழந்தையை கொடுத்தார்.

    ஆனால் அவளால் இந்த பூமியில் 3-4 நிமிடங்கள் மட்டுமே சுவாசிக்க முடிந்தது.

    நான் இல்லாமல் போனால் தான் உனக்குப் புரியும் என்று சொல்வாள். என்னால் அதைத் தாங்கவே முடியாது.

    இந்த மாதிரி பேசுவதை நிறுத்தச் சொல்வேன்.

    அப்போதுகூட ஒருமுறை, டியர் என்று கூப்பிட்டு, நான் இறந்தால் இசை வாத்தியங்களோடு, நீ ஆடிக் கொண்டே என் உடலைச் சுடுகாடு வரை எடுத்துப் போக வேண்டும் என்று கூறினாள் என உருக்கமாக முடித்தார் ஸ்ரீகாந்த்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!