Connect with us

    பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால்; திடீரென விபரீத முடிவெடுத்த கணவர்..

    Jaikrishnan

    Tamil News

    பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால்; திடீரென விபரீத முடிவெடுத்த கணவர்..

    பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Jaikrishnan

    சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன். இவரது மனைவி இந்துமதி.

    இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    இதையடுத்து கணவன் ஜெய்கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. நண்பர்கள் அவரது உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவரது மனைவி மட்டும் தனது கணவருக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜெய்கிருஷ்ணன், மனைவியைத் தொடர்ந்து கொண்டு ஏன் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வில்லை என கேட்டுள்ளார்.

    மேலும் உடனடியாக வீட்டிற்கு வரும்படியும் கூறியுள்ளார். ஆனால் மனைவி இந்துமதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலிலிருந்த ஜெய்கிருஷ்ணா நேற்று இரவு வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் ஜெய்கிருஷ்ணா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!