Connect with us

    காதல் மனைவியை ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டிய கணவன்; நடந்த விபரீதம்..!!

    Love couple

    Tamil News

    காதல் மனைவியை ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டிய கணவன்; நடந்த விபரீதம்..!!

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Love couple

    மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் சோனியா (34). இவரும் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர்.

    ஜெயராஜ் டிரைவரகவும் சோனியா அழகு நிலைய தொழிலும் செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    விவாகரத்து கோரி இருவரும் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று சோனியா தனது இரண்டாவது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சுசீந்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அப் போது, அவரை பின் தொடர்ந்து ஆட்டோவில் வந்த ஜெயராஜ் தனது மனைவியை வழிமறித்து அரிவாளால் மகன் கண்முன்னே வெட்டியுள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஜெயராஜை பிடித்து சம்பவ இடம் வந்த சுசீந்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்த மனைவியை மகன் கண்முன்னே கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சோனியா படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஜெயராஜ் மீது ஏற்கனவே திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.

    பட்டப்பகலில் நடுரோட்டில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!