Uncategorized
“நான் வாங்கி வந்த பிராந்தியை எடுத்து குடித்ததால் அடித்து கொன்று விட்டேன்” – மனைவியை கொலை செய்த கணவரின் திடுக் வாக்குமூலம்..!!
தனக்காக வாங்கி வைத்திருந்த பிராந்தியை எடுத்து குடித்ததால் மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
கூலித் தொழிலாளியான இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
லட்சுமணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சரண்யா திடீரென இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாய் காளியம்மாள் தனது மகள் சரண்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இயற்கையாக சாகவில்லை அவரை அவரது கணவர் லட்சுமணன் அடித்து கொலை செய்து விட்டதாகவும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்
சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 6ஆம் தேதி அன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த லட்சுமணன், மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பனியாரம் வாங்கிக்கொண்டு வந்தார்.
அதை சாப்பிட்டு பார்த்த சரண்யா, பனியாரம் ருசியாக இல்லை இதைப் போய் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று கேட்டு கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரப்பட்ட லட்சுமணன் சரண்யாவை அடித்து கீழே தள்ளியிருக்கிறார். இதில் சரண்யா உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் போலீசாரின் தீவிர வேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லட்சுமணனை உடனே கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நான் எனக்காக வாங்கி வைக்கும் பிராந்தியை அடிக்கடி என் மனைவி எடுத்துக் குடித்துவிடுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்.
அப்படித்தான் கடந்த ஆறாம் தேதி அன்று இரவும் நான் எனக்காக வாங்கி வைத்திருந்த பிராந்தியை எடுத்து என் மனைவியைத் குடித்துவிட்டார்.
இதில் ஆத்திரப்பட்டு நான் அவரைக் கீழே தள்ளினேன். அப்போது கீழே விழுந்த சரண்யாவின் தலையில் அடிபட்டு இறந்து விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.
இதை அடுத்து லட்சுமணனை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்
