Connect with us

    அழகான மனைவியை ஆத்திரம் தீர சைக்கோ பாணியில் கொலை செய்த கணவர்; போலீஸ் விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை..!

    Couple

    Tamil News

    அழகான மனைவியை ஆத்திரம் தீர சைக்கோ பாணியில் கொலை செய்த கணவர்; போலீஸ் விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை..!

    திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டின் உள்ளே பிளாஸ்டிக் பையினால் சடலத்தை சுற்றி வைத்து வீட்டை பூட்டி விட்டு, தனது தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆந்திர மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார் கணவர்.

    Couple

    லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறி உள்ளனர் நரசிம்மராஜ் (37) – சிவரஞ்சனி (26) தம்பதியினர்.

    இவர்களுக்கு 10 மற்றும் 9 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நரசிம்மராஜ் பூர்வீகம் ஆந்திர மாநிலம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருச்சி சமயபுரம் பகுதியில் குடியேறிய நரசிம்மராஜ், திருச்சி திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகள் சிவரஞ்சனி யை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

    நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் விற்பனை செய்யும் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளுக்கு ஏஜென்டாக இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சமயபுரம் சக்திநகரில் புதிதாக வீடு கட்டிய அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டினை ரூ. 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

    இந்த வீட்டினை விற்பனை செய்த பிறகு, தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய் நகரில் நரசிம்மராஜ் அவரது தாய், மற்றும் நரசிம்மராஜ் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 5 பேரும் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.

    வீட்டை விற்று கிடைத்த ரூ. 28 லட்சத்தினை நரசிம்மராஜ் அவரது தடை செய்யப்பட்ட லாட்டரியில் முதலீடு செய்ய முயன்றுள்ளார்.

    இதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்துள்ளது.

    இது தொடர்பாக சிவரஞ்சனியின் பெற்றோர் இருவரையும் சமாதானப்படுத்தி தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம், வீட்டு மனைகளை வாங்கி முதலீடு செய்ய இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், மனைவியை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி மறைத்து வைத்துள்ளார்.

    அதிகாலை தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளிடம் மனைவி சிவரஞ்சனிக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளேன்.

    நாம் அனைவரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அக்கா வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.

    அதன் படி, நரசிம்மராஜ் தாய், மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரும் கடந்த திங்கள் கிழமை வீட்டினை பூட்டி விட்டு ஆந்திரா சென்றுள்ளனர்.

    சிவரஞ்சனியின் பெற்றோர் சிவரஞ்சனிக்கும், அவரது மருமகன் நரசிம்மராஜுக்கும் வழக்கம் போல போன் செய்துள்ளனர்.

    இருவரின் தொலைபேசி என்னும் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது.

    இதனால் சந்தேக மடைந்த பெற்றோர் தாளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

    அப் போது வீடு பூட்டிய நிலையில் இருந்ததால், அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் பகுதியில் உள்ள நரசிம்மராவ் அக்காவிற்கு போன் செய்து கேட்டுள்ளார்.

    அப்போது, குழந்தைகள் இரண்டும் இங்கு தான் உள்ளதாகவும், தனது அண்ணன் நரசிம்மராஜ், தனது தாய் ஆகிய இருவரும் கொரோனா பரிசோதனை எடுக்க செல்வதாக கூறி விட்டு சென்றனர், அனால் இதுவரை இருவரும் வீடு திரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

    உடனே சிவரஞ்சனியின் பெற்றோர், தாளக்குடியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் வாஷின் மெசின் அருகில் சந்து பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியநிலையில் இருந்த சடலத்தை பிரித்து பார்த்த போது சிவரஞ்சனி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

    இது குறித்து சமயபுரம் கொள்ளிடம் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்

    சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் காவல் துறையினர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!