Viral News
கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி; இரு மனைவிகளின் தொல்லை தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிய கணவர்…!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண்.
இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். அடிக்கடி டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருமே டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இருவருக்கும் டிக் டாக்கில் ஃபாலோயர்ஸ் அதிகம் உள்ளனர். இருவரும் இணைந்து வீடியோக்களை உருவாக்கி அதிக பிரபலம் அடைந்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முன் கல்யாண் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சில காலம் நன்றாக இருந்த இவர்களது காதல் சில காரணங்களால் முறிந்தது.
தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நித்யஸ்ரீ
கல்யாணை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி இருக்கிறார்.
அதற்கு கல்யாண் தனக்கு திருமணம் ஆகி விட்டது என கூறி இருக்கிறார்.
ஆனாலும் பிடிவாதமாக இருந்த நித்யஸ்ரீ இது குறித்து கல்யாண் மனைவி விமலாவிடம் கல்யாணிற்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியுள்ளார்.
இருவரும் ஏற்கனவே காதலித்து உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட விமலா, இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று கல்யாண்- நித்யஸ்ரீ திருமணம் விமலா தலைமையில் நடைபெற்றது.
மூவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மிகப் பெரும் சண்டை அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் கல்யாண் வீட்டை விட்டே ஓடிவிட்டார் என்ற தகவல் வெளியானது.
இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.
இதற்கு காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. முதல் மனைவி விமலா ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆனவராம்.
2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இது அந்த ஊர் பஞ்சாயத்து உட்பட அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள்.
ஊர் பஞ்சாயத்துக்கு கட்டப்பட்டுத்தான், விமலா, தன்னுடைய கணவருக்கு 2வது திருமணத்தையே செய்து வைத்துள்ளார்.
இப்போது விஷயம் என்னவென்றால் 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கல்யாணிடம் சத்தியம் வாங்கியிருந்த நிலையில், சிக்கலே அந்த சத்தியத்தில்தான் வந்துள்ளது.
நித்யஸ்ரீ வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவருக்கும் விமலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பிரச்சனையை ஆரம்பித்ததே நித்யஸ்ரீதானாம். விமலாவை அவரது முதல் கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று கல்யாணை இவர் நச்சரித்துள்ளார்.
அதற்கு விமலா, அதெப்படி? 3 பேரும் ஒரே வீட்டில் குடித்தனம் செய்ய வேண்டும் என்று சத்தியம் செய்தாகிவிட்டதே என்று பதிலுக்கு மல்லுக்கட்டினாராம்.
விமலாவும், நித்யஸ்ரீயும், ஆளுக்கு ஒரு பக்கம் கல்யாணிடம் இது தொடர்பாக சண்டை போட்டதாக தெரிகிறது.
இவர்கள் 2 பேரையும் சமாளிக்க முடியாமல், “இதோ வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே போனவர்தானாம். இன்னும் வீட்டுக்கு வரவேயில்லையாம்.
இப்போது 2 பெண்களும் சேர்ந்து, கல்யாணை வலைவீசி தேடி வருகிறார்கள் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றது.