Viral News
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம்; முதலிரவில் பெண்ணின் வயிறை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்…!!
குழந்தை இருப்பதை மறைத்து இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்ட பதர்வாஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் இரு குடும்பத்தாரின் ஏற்பாட்டில் திருமணம் நடந்து முடிந்தது.
தனக்கு அப்பெண் மணமகளாக பேசி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே செல்போன் மூலம் அந்த இளைஞர் தனது வருங்கால மனைவியுடன் கொஞ்சி கொஞ்சி பேசி மகிழ்ந்துள்ளார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஒருவரை ஒருவர் ஆசையுடன் பேசி தங்களது வருங்கால வாழ்க்கையை பற்றி திட்டமிட்டு வந்துள்ளனர்.
தங்களது திருமண நாளை எண்ணி ஏங்கிப் போயிருந்த அந்த இளைஞர் தனது
வருங்கால மனைவியுடன் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியாக கழிக்க போகிறோம் என்ற கனவில் மிதந்து வந்திருந்தார்.
அப்படி திட்டமிட்டபடியே இருவருக்கும் திருமணம் நடந்தது.
பின்னர் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலிரவன்று ஆசையுடன் ஆடைகளை களைந்த மணமகனுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.
மணமகளின் அடிவயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டு தையல் போடப்பட்டு இருந்தது,
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தை பிறந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அது குறித்து மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இந்நிலையில் உடனே அந்தப் பெண்ணை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் மீண்டும் சென்று மனைவியை வீட்டிற்கு அழைத்து வரவில்லை. அவர் உடனே தான் ஏமாற்றப்பட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் தனது கணவன் தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்தார்.
மேலும் நீதிமன்றத்தில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை மோசடி செய்ததாக அந்த இளைஞர் வழக்கு தொடுத்தார்.
பின்னர் ஆர்டிஐ உதவியுடன் அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது.
அதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்தது.
பின்னர் அதற்கான ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்ர்.
3 மாத குழந்தை இருப்பதை மறைத்து பெண் இளைஞரை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
