Tamil News
புருசன் இறந்து 3 மாசம் கூட ஆகல; அதுக்குள்ள அரிப்பெடுத்து அடுத்தவன் கூட சென்ற பெண் உயிரிழந்த பரிதாபம்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, புருசன் இறந்து 3 மாசம் கூட முடியாமல் இருந்த நிலையில் கள்ளக்காதலனுடன் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எருக்காலம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (47) கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஒரு மனைவி ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
இதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி மாரியம்மாள் (40).
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் மாரியம்மாள் உடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்து தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து மாரியம்மாளம் மணிகண்டனும் ஊரைவிட்டு மாயமாகினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை குண்டடம் அருகே பொம்ம நாயக்கன் பட்டி அருகே உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அருகே இருவரும் சடலமாக கிடந்தனர்.
அருகே காலி மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர் விஷ பாட்டில் ஆகியவை கிடந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனை அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தினர் தங்களை பிரித்து விடுவார்களோ என அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
