Tamil News
கடிதம் எழுதி வைத்து விட்டு ஊரை விட்டு ஓடிப் போன கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்…!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மயிலேறி.
40 வயதான இவர் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர்.
இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் செல்வமணி. கூலித்தொழிலாளி.
இவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். செல்வமணியின் மனைவி மகராசி (33).
இவர் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் உள்ள கிளை தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில், மயிலேறிக்கும், மகராசிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இது அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி இருவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில், தனது கணவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் சேர்ந்து தலைமறைவாகி இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடித்துத் தரும்படியும் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் மயிலேறியின் மனைவி.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்திற்கு கிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்மணியின் உடல்கள் கிடப்பதாக ஒட்டப்பிடாரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து காட்டுப் பகுதிக்கு விரைந்துசென்ற காவல்துறையினர், அது தலைமறைவான மயிலேறி மற்றும் அந்தப் பெண்தான் என்பதை கண்டறிந்தனர்.
போலீசார் நடத்திய ஆய்வில் கடிதம் ஒன்று கிடைத்ததாக தெரிகிறது.
அந்த கடிதத்தில்,”எங்களது இந்த முடிவிற்கு யாரும் காரணம் இல்லை. நாங்களே காரணம். நாங்களே எங்களது முடிவை தேடிக்கொள்கிறோம்.
இதுகுறித்து யாரையும் விசாரணை செய்யவேண்டாம்” என எழுதப்பட்டு மயிலேறி மற்றும் அந்தப் பெண் கையெழுத்திட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பிறகு இறந்தவர்களின் உடல்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது.
மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
