Viral News
நடுவானில் பறக்கும் விமானத்தில் கணவர் கண் எதிரே திடீரென பெண் பயணிக்கு நேர்ந்த துயரம்; கதறிய கணவர்..!
துபாயில் இருந்து கேரளா திரும்பி கொண்டிருந்த போது நடுவானில் பெண் பயணி ஒருவர் அவரது கணவர் கண் முன்பே உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் நடுவானில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே மணிமாலா என்ற பகுதியை சேர்ந்தவர்
மினி எல்சா ஆண்டனி (52).
இவர் தனது கணவர் ராய் என்பவருடன் நேற்று துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஃப்ளை துபாய் என்ற விமானத்தில் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென விமானத்தில் மினி எல்சா ஆன்டனிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் சுயநினைவையும் இழந்தார்
இதனால் அவரது கணவர் அதிர்ச்சியடைந்தார்.
இதன்பின்னர் விமானம் கொச்சியில் தரையிறங்கியதும் மருத்துவமனைக்கு மினி கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மினி இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மினி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார் என தெரிகிறது.
இது இயற்கையான மரணம் என்பதால் காவல்துறையினர் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை.
இச்சம்பவம் மினி குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
