Viral News
கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..!!
கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மனைவி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் நாளேடுகளை திருப்பினால் கள்ளக்காதல் சம்பந்தமான செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த அளவிற்கு நம் சமூகத்தில் கள்ளக்காதல் புரையோடி போய் இருக்கிறது.
மாறிவரும் கலாச்சாரம், ஒழுக்கமின்மையே இதற்கு மூல காரணமாக சொல்லப்படுகிறது.
மாமியார், மருமகனுடன் கள்ளக்காதல், மைத்துனன் அண்ணியுடன் கள்ளக்காதல், மாமா மச்சான் மனைவியுடன் கள்ளக் காதல் என அநியாயங்கள் அரங்கேறி வருகின்றன.
கணவனோ, மனைவியோ குடும்ப உறவில் இருந்து விலகி மூன்றாவது ஒரு உறவை ஏற்படுத்தும் போது குடும்பத்தில் பல பூகம்பங்கள் வெடிக்கிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத சிலர் கொலை அல்லது தற்கொலைக்கு துணிகின்றனர்.
அந்த வகையில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் மனைவி அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தண்டனை கொடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் சேர்ந்தவர் கிரிதர் (50) இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.
கிரிதர் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
போதிய வருமானம் இல்லாததால் பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காக குடிமல்காபூர் பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார் கிரிதர்.
அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு வேறோரு பெண்ணுடன் கிரிதருக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதை அறிந்த மனைவி தனது கணவர் கிரிதருடன் சண்டை போட்டு வந்துள்ளனர்.
கணவரின் கள்ளத்தொடர்பை தடுப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து தரியாபாக் பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனாலும் கிரிதர் அந்த பெண்ணுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்துள்ளார்.
இதனை மனைவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதனால் தொடர்ந்து தனது கணவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கிரிதர் வேலைக்கு சென்றுவிட்டு வந்து காலை 11 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் .
அப்போது கள்ளக்காதலியை சந்தித்து விட்டுத்தான் கணவர் வந்திருக்கிறார் என கருதிய மனைவி உறங்கிக் கொண்டிருந்த கிரிதர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றினார்.
இதில் பலத்த காயமடைந்த கிரிதர் வெப்பம் தாங்க முடியாமல் அலறினார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரிதரை மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
