Tamil News
நண்பர்கள் அறிவுரைப்படி வயாகரா மாத்திரை சாப்பிட்ட புதுமாப்பிள்ளைக்கு குறையாத விரைப்புத்தன்மை; மருத்துவமனைக்கு பதறி அடித்து சென்ற பரிதாபம்..!
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் கோமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே, இவருக்கு தாம்பத்ய குறைபாடு இருந்துள்ளது.
இதனால், இவரதூ நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலின் படி, தாம்பத்ய உறவுக்கு வயாக்ரா மாத்திரையை எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாத்திரை பலன் அளிப்பதாக நம்பி, அடிக்கடியும் அளவுக்கு அதிகமான அளவுக்கும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதனிடையே சில நாட்களிலேயே விமலுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது.
மேலும் விமலின் பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பிறப்புறுப்பு தொடர்ச்சியான விரைப்பு ஏற்பட்டதன் காரணமாக விமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் பிறப்புறுப்பில், அறுவை சிகிச்சை செய்து வலியை குறைத்தனர்.
ஆனாலும் விமலின் விரைப்புத்தன்மையை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டார்கள்.
வாழ்நாள் முழுக்க இனி பிறப்புறுப்பு இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
மேலும் விரைப்புத் தன்மையை மறைக்க இறுக்கமான உள்ளாடையை அணிந்து கொள்ளவேண்டும்.
அதேவேளையில், குழந்தைகள் பெற்றுக்கொண்டு வழக்கமான வாழ்க்கையை தொடரமுடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நண்பர்களின் பேச்சைக் கேட்டு புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
