Connect with us

    செல்போனில் சிரித்து சிரித்து பேசிய காதல் மனைவி; ஆத்திரத்தில் செல்போனை உடைத்த கணவன்; மனைவி எடுத்த விபரீத முடிவு!!

    Girl Cellphone speech

    Tamil News

    செல்போனில் சிரித்து சிரித்து பேசிய காதல் மனைவி; ஆத்திரத்தில் செல்போனை உடைத்த கணவன்; மனைவி எடுத்த விபரீத முடிவு!!

    நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    Girl Cellphone speech

    இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

    சினேகா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும் அதனை கணவர் கண்டித்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனால் இவர்களுக்குள் பலநாட்கள் தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சினேகா சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று சினேகா குழந்தையுடன் மைக்கில் மதன் சிங் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது சினேகா போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மைக்கேல் தனது மனைவியிடம் இருந்து போனை பிடுங்கி அதனை தரையில் போட்டு ஆவேசமாக உடைத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சினேகா அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக்கொண்டு உள்ளே தூக்கிட்டு கொண்டார்.

    சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சினேகாவை தூக்கில் இருந்து இறக்கி பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் சினேகாவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து மைக்கேல் மதன் சிங் சினேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும் இன்றும் அடித்து கொலை செய்து விட்டார் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

    இறந்த சினேகாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. தூக்கிட்டு கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்தது.

    இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சினேகா செல்போன் உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது கணவர் கொலை செய்ததாரா ? என்பது குறித்து பணகுடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!