Tamil News
மாமனாருடன் உல்லாசமாக இருந்த மருமகள்; நேரில் பார்த்த மகனுக்கு நேர்ந்த விபரீதம்..!!
தனது தந்தையுடன் தனது மனைவி உல்லாசமாக இருந்த போது இருவரையும் கையும் களவுமாக பிடித்த மகனுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா.
இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின் தந்தை பல்வந்த் சிங்குக்கும் (வயது 64) கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
விக்ரம் சிங் வேலைக்கு சென்று விட்ட பிறகு இந்த ஜோடி அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஒருநாள் வெளியில் விக்ரம்சிங் வெளியில் சென்ற பிறகு அவரது மனைவியும், விக்ரம் சிங் தந்தையும் வழக்கம் போல உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஆனால், குறித்த நேரத்திற்கு முன்னதாக வீடு திரும்பிய விக்ரம்சிங், தனது மனைவியும், தந்தையும் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அப்போது தனது தந்தையையும், மனைவியையும் அவர் கண்டித்துள்ளார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என கருதிய பல்வந்த் சிங் தனது மகனை கொன்றுள்ளார்.
பின்னர் விக்ரம் சிங்கே தனது உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் மின்விசிறியில் அவரது உடலை தொங்கவிட்டு நாடகமாடி உள்ளனர்.
மறுநாள் காலை தனது மகன் உயிரை மாய்த்துக் கொண்டதாக குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே கூறி நாடகமாடி உள்ளனர்.
இதனை அடுத்து இறுதிச் சடங்குகளை செய்ய குடும்பத்தினர் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து விக்ரம் சிங்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பூஜாவையும், அவரது மாமனார் பல்வந்த் சிங்கையும் போலீசார் விசாரித்தனர்
அப்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மருமகள் மற்றும் மாமனார் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
