Tamil News
“அப்பா..! பக்கத்து வீட்டு ஆன்டி என்னை கூட்டி போய்” – அப்பாவிடம் கதறி அழுத 13 வயது சிறுவன்..!
சிவகங்கை அருகே 13 வயது சிறுவனை 35 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி அருகே உள்ள ஆவனி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி உதயவள்ளி(35)
இளையராஜா சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இவரது வீட்டுக்கு அருகே 13 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.
கடந்த 2020- ம் ஆண்டு உதயவள்ளி இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுவனை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து அச்சிறுவன் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது கீழச்செவல்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அது குறித்து உதவள்ளியிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததான்.
இதனால் போலீசார் சந்தேகத்தின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கான வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதில் உதய வள்ளி மீதான குற்றம் உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
13 வயது சிறுவனுக்கு 35 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்து சிறை தண்டனை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
