Connect with us

    பேஸ்புக், வாட்ஸ் அப்பே கதி என கிடந்த மகளை கண்டித்த பெற்றோர்; விரக்தியில் மகள் செய்த பகீர் காரியம்..!!

    Tamil News

    பேஸ்புக், வாட்ஸ் அப்பே கதி என கிடந்த மகளை கண்டித்த பெற்றோர்; விரக்தியில் மகள் செய்த பகீர் காரியம்..!!

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி.

    இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களது மகள் சுதா(வயது.17).

    இவர் இதே ஊரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார்.

    சுதா எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர்கள் சுதாவை பலமுறை கண்டித்துள்ளார்கள்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி வேலைக்கு புறப்பட்டு செல்கையில், சுதா செல்போனை பார்த்து கொண்டிருந்திருந்தார்.

    இதனால் பெற்றோர்கள் சுதாவை மீண்டும் கண்டித்துள்ளனர். பிறகு சுப்பிரமணி கட்டிட வேலைக்கும் அவரது மனைவி முருகேஸ்வரி கூலி வேலைக்கும் சென்று விட்டனர்.

    மாலையில் இருவரும் வீடு திரும்பியபோது வீட்டில் தூக்குப்போட்டு சுதா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவி சுதாவின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச் சம்பவம் சக மாணவ, மாணவிகளிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!