Connect with us

    2-வது கணவருடன் உல்லாசமாக இருந்த போது அழுத 2- வயது குழந்தையின் முகத்தில் சூடு வைத்த தாய்..!

    Husband and wife

    Tamil News

    2-வது கணவருடன் உல்லாசமாக இருந்த போது அழுத 2- வயது குழந்தையின் முகத்தில் சூடு வைத்த தாய்..!

    இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்ததாக, தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    Husband and wife

    சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பானு(28). இவருக்கும் விமல் ராஜ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த தம்பதிக்கு தற்போது இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது

    கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில்,அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்பவருடன் பானுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பானு, தன்னுடைய அம்மா கன்னியம்மாவுக்கு போன் செய்து, தனது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதனால், கன்னியம்மாளும், பானு வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்துள்ளார்.

    அப்போது குழந்தை முகத்தில் காயங்களும், சூடு வைத்த கொப்புளங்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    உடனே விரைந்த வந்த சாஸ்திரி நகர் போலீசார் குழந்தையின் பாட்டி கன்னியம்மா மற்றும் தாய் பானுவிடம் விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    உல்லாசமாக இருப்பதற்கு முதல் கணவரின் குழந்தை தொல்லையாக இருப்பதால், பானுவும், ஜெகனும் சேர்ந்து குழந்தையை அடித்தும் சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, 2 பேரையும் போலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!