Tamil News
கள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக தனது 2 குழந்தைகளுக்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்த கொடூர தாய்; பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!
கள்ளக்காதலனை திருமணம் செய்தற்காக தான் பெற்ற 2 குழந்தைகளுக்கு உப்புமாவில் எலி பேஸ்ட் கலந்த கொடுத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 34). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கார்த்திகா( 21) இவர்களுக்கு சஞ்சனா (3) சரண்(1 ) என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று அந்த ஒன்றரை வயதான ஆண் குழந்தை சரண், வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு மயக்கமடைந்து விட்டதாக கார்த்திகா தனது கணவர் ஜெகதீஷூக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து பதறி அடித்து வீட்டிற்கு ஓடி வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது குழந்தை இறப்பில் உள்ள சந்தேகத்தை உறுதி செய்த போலீசார், தாய்-தந்தையை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல உண்மைகள் வெளிவந்து உள்ளது.
குழந்தையின் இறப்பில் உள்ள சந்தேகம் தொடர்பாக தாய் கார்த்திகா மற்றும் தந்தை ஜெகதீசனிம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கார்த்திகாவுக்கு செல்போனில் வந்த சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்தது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை தீவிர செய்தனர்.
அப்போது கார்த்திகாவிற்கு பலருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கார்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கார்த்திகாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சுனில் மீது கொண்ட காதலால் குழந்தையை கொன்றால் சுனில் தன்னிடம் தொடர்ந்து பேசுவார் என கருதி குழந்தையை கொலை செய்ய முடிவெடுத்தாக கூறியுள்ளார்.
இதற்காக கடந்த 2 நாட்களாக கணவனிடம் வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி எலிமருந்து வாங்கி வர செய்துள்ளார்.
சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சேமியா உப்புமாவில் விஷ மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
இதில் மூத்த குழந்தை குறைவாக சாப்பிட்டதால் அந்த குழந்தை பிழைத்து கொண்டதாகவும், இளைய மகன் வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட போலீசார் சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.