Connect with us

    பெற்ற தாய்க்கு சோறு கொடுக்காமல், கொடுமைப்படுத்தி வரும் ரெகானா பாத்திமா; இவர் யார் தெரியுமா? கடும் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு சென்ற பெண்களில் ஒருவர்..!!

    Rehana fathima

    Viral News

    பெற்ற தாய்க்கு சோறு கொடுக்காமல், கொடுமைப்படுத்தி வரும் ரெகானா பாத்திமா; இவர் யார் தெரியுமா? கடும் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு சென்ற பெண்களில் ஒருவர்..!!

    கேரளாவை சேர்ந்த ரெகானா பாத்திமா. இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பெண்மணியாக இருந்தாலும் சமூகத்தில் இடது சாரியாக தோற்றமளிக்கிறார்.

    Rehana fathima

    இவர் இவ்வாறு பெண் உரிமையாளர் ஆவதற்கு முன் இவர் கணவர் எடுத்த ஈகா என்ற ஊடு பாலின நபர்களின் வாழ்க்கையை பற்றி கூறும் படத்தில் நடித்துள்ளார்.

    பெண் உரிமை ஆர்வலராக மாறுவதற்கு முதல் படி எடுத்து வைத்தது இப்படத்தின் மூலம் தான் எனக் கூறுகின்றனர்.

    இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் வருடம் தோறும் நடைபெறும் புலி முகமூடி நடனத்தில் முதல்முறையாக பெண்ணாக இவர் கலந்து கொண்டார்.

    பல ஆண்கள் புலி வேடம் அணிந்து ஆடும் களத்தில், இவர் புலிவேடம் அணிந்து அவர்களுடன் புலி நடனம் ஆட தொடங்கினார்.

    இதற்கு அடுத்தபடியாக பேராசிரியர் ஒருவர், பெண்கள் அவர்களது மார்பகங்களை மறைப்பதில்லை என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார்.

    அவருக்கு பதிலடி தரும் விதத்தில் ரெஹானா, அவரது மார்பகங்களை தர்ப்பூசணி கொண்டு மறைத்து போட்டோ சூட் எடுத்து அதனையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    இதன் தொடர்ச்சியாக பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறிவந்த நிலையில், ஆண்களை காட்டிலும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அவ்வாறு உத்தரவிட்டதை அடுத்து, இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர்.

    அவ்வாறு சென்ற பெண்களில் ரெகானாவும் ஒருவர். இதற்கு ஒரு படி மேலாக தான் பெற்ற குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கிறேன் என, தனது குழந்தைகளையே தன் அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து அதனையும் இணையத்தில் வெளியிட்டார்.

    இவர் இவ்வாறு செய்தது பாலியல் சீண்டல் என பல தரப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வாறு அடுத்தடுத்து பல சர்ச்சைகளுக்குள் சிக்கிய ரெஹான தற்பொழுது புதிதாக ஓர் வழக்கில் சிக்கியுள்ளார்.

    இவரைப் பெற்ற தாயே இவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது மகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை கொடுமை செய்து வருகிறார்.

    இதை தாங்க முடியாமல் நான் இரண்டு மாத காலமாக தனது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன்.

    ஆனால் தற்பொழுது அவர்களையும் ரெஹானா மிரட்டி வருகிறார்.

    இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.

    போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து ரெகானாவை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!