Tamil News
அடுத்தடுத்து இரு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு சென்றதால், ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொன்ற தந்தை..!
நாகை அருகே இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் மனைவியை அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிங்காரவேல் – முத்துலட்சுமி தம்பதியினர்.
இவர்களுக்கு ஹேமலதா (26) பவித்ரா (24) ஐஸ்வர்யா (23) பிரகதீ (22) ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், முதல் இரண்டு மகள்களுக்கு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில், மற்ற இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் சில வருடங்களாக மனைவி முத்துலட்சுமி மீது, கோவத்தில் இருந்து வந்த கணவர் சிங்காரவேலு தினமும் இரவில் மதுபோதையில் வந்து மனைவியை திட்டிய வண்ணமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவும் மது போதையில் வந்த சிங்காரவேலு மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி முத்துலட்சுமியை எனது மகள்கள் ஓடிப்போக நீதான் காரணம் என கூறி சண்டையிட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கட்டையால் தனது மனைவியின் தலையில் அடித்தே சிங்காரவேலு கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் அங்கு மறைந்திருந்த சிங்காரவேலுவை கைது செய்தனர்.
மேலும், முத்துலட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
