Connect with us

    பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடிச் சென்று காதலனை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்வில் நிகழ்ந்த சோகம்..!

    Newly married woman

    Tamil News

    பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடிச் சென்று காதலனை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்வில் நிகழ்ந்த சோகம்..!

    பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடிச் சென்று காதலனை திருமணம் செய்து கொண்ட பெண், திருமணத்திற்கு பின்னர் காதல் கணவரின் செயலைக்கண்டு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Newly married woman

    சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா.

    இவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.

    அப்போது அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்த யுவராஜ் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

    இந்த பழக்கம் காதலாக மாறி இருக்கிறது.

    இருவரின் காதல் விவகாரம் மேகலாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், யுவராஜை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    மேலும், மேகலாவுக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

    இதை தெரிந்துகொண்ட மேகலா கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறி வடபழனி கோவிலில் யுவராஜை திருமணம் செய்திருக்கிறார்.

    திருமணத்திற்கு பின்னர் யுவராஜ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது மேகலாவுக்கு தெரியவந்திருக்கிறது.

    இதனால் தினமும் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்திருக்கிறது.

    இந்த பிரச்சினை அதிகமாகவே கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மேகலாவை அடித்திருக்கிறார் யுவராஜ்.

    இதனால் ஆத்திரமடைந்த மேகலா தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

    அங்கு சென்றதும் அவர் கணவரின் செயலால் கடும் மன உளைச்சலில் இருப்பது எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தூங்கச் செல்வதாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு சென்றிருக்கிறார் மேகலா.

    வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து இருக்கிறார்கள்.

    அங்கே மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியிருக்கிறார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!