Connect with us

    “விடியல் ஆட்சியில் 6 மாத கர்ப்பிணியான எனக்கு விடியல் இல்லையா”- நியாயம் கேட்டு பெண் தர்ணா; அதிர்ந்து போன கோவில்பட்டி..!!

    Pregnant girl want justice

    Tamil News

    “விடியல் ஆட்சியில் 6 மாத கர்ப்பிணியான எனக்கு விடியல் இல்லையா”- நியாயம் கேட்டு பெண் தர்ணா; அதிர்ந்து போன கோவில்பட்டி..!!

    கோவில்பட்டி அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயலும் காதலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு 6 மாத கர்ப்பிணி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Pregnant girl want justice

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிரத்தினம்.

    இவரது மகள் மகாராணி (25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் இசக்கிமுத்து என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் திருமண ஆசைவார்த்தை கூறிய இசக்கிமுத்து, அவருடன் நெருங்கி பழகினார். இதில் மகாராணி கர்ப்பமடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர், கருவை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாத்திரை கொடுத்ததாக தெரிகிறது.

    இதில் மகாராணியின் கரு கலைந்தது.

    இதனைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் நெருங்கி பழகியதால் மகாராணி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

    இதுகுறித்து மகாராணி, இசக்கிமுத்துவிடம் கூறிய போது அவர், வழக்கம்போல் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியதாக தெரிகிறது.

    மேலும் இசக்கி முத்துவின் தாய் இசக்கியம்மாள், தந்தை செல்லப்பா, அவரது சகோதரி இசக்கியம்மாள், அத்தை துர்க்கையம்மாள் ஆகியோர் சேர்ந்து கருவை கலைத்து விடு அல்லது நகையுடன் வந்தால் உன்னை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

    இதுகுறித்து மகாராணி கடந்த 24 ஆம் தேதி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாராணி மற்றும் அவரது தாய் ஆகியோர் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டிஎஸ்பி உதயசூரியன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து தாய், மகள் இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மகாராணி கூறுகையில், நான் எனது பெரியப்பா வீட்டிற்கு செல்லும் போது, அங்கு வைத்து செல்போன் கொடு பேசி விட்டு தருகிறேன் என்று இசக்கிமுத்து கேட்டதால், நான் கொடுத்தேன்.

    அதன் பின்னர் என்னுடைய செல்போனுக்கு தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார்.

    பின்னர் தன்னை காதலிக்க வற்புறுத்தினார். இல்லை என்றால் வீட்டில் உள்ளவர்களை கொன்று விடுவதாக மிரட்டினார்.

    மேலும், தன்னை திருணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து நான் அவருடன் பழகி வந்தேன்.

    இதன் காரணமாக கர்ப்பம் அடைந்தேன், ஆனால் தற்பொழுது திருணம் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார்.

    கர்ப்பத்தினை கலைத்து விடு என்று இசக்கிமுத்து குடும்பத்தினர் என்னை மிரட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டேன்.

    தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!