Viral News
ரயில் நிலைய இலவச வைஃபை மூலம் வெறியுடன் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மூட்டை தூக்கும் தொழிலாளி; குவியும் பாராட்டுக்கள்..!
ரயில் நிலைய இலவச வைஃபை மூலம் வெறியுடன் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் உள்ள இலவச வைஃபை மூலம் இணையத்தில் படித்து கூலித்தொழிலாளி ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்.
கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவருக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர் குடும்பத்தில் நிலவும் வறுமையை கருத்தில் கொண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
போதுமான வருமானம் இல்லாததால், குடும்ப கஷ்டத்திற்காக அவர் இந்த வேலையை பார்த்து வந்துள்ளார்.
12 ஆம் வகுப்பு படித்து வீட்டு குடும்ப சூழ்நிலையால் கூலி தொழிலாளியான இவருக்கு, நன்கு படித்து உயரிய பதவியில் அமர வேண்டும் என்பது தான் கனவு, லட்சியம் எல்லாமே.
அப்போது தான் ஸ்ரீநாத்தின் கனவுக்கு கைக் கொடுக்க வந்தது ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை திட்டம்.
மோடி அரசு டிஜிட்டல் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய இந்த திட்டம் ஸ்ரீநாத்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.
ஒருபக்கம் வேலை செய்துக் கொண்டே, மறு பக்கம் காதில் ஹெட்ஃபோன்களை மாற்றிக் கொண்டு ஸ்ரீநாத் ரயில் நிலையத்தை சுற்றி வருவராம்.
இதைப் பார்ப்பவர்கள் எல்லாம் ”ஒழுங்காக வேலை செய்யாமல் எப்போதும் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்” என்று ஸ்ரீநாத்தை திட்டுவார்களாம்.
ஆனால், கொஞ்ச நாள் சென்ற பின்பு தான் தெரிந்ததாம் ஸ்ரீநாத் சினிமா பாட்டு கேட்கவில்லை, படித்துக் கொண்டிருக்கிறார் என்று.
ஆம், வங்கும் ஊதியம் வீட்டு செலவிற்கே சரியாக இருக்கும் பட்சத்தில், ஸ்ரீநாத்தினால் எப்படி சிவில் தேர்விற்கான புத்தகங்களை வாங்கி படிக்க முடியும்.
அப்படி புத்தகம் கிடைத்தாலும் படிக்க எங்க நேரம் இருக்கிறது. அதனால் தான் ரயில் நிலையத்தில் கிடைக்கும் வைஃபை மூலம் ஸ்ரீநாத் புத்தகங்களை ஆடியோ மற்றும் டிஜிட்டல் முறையில் தரவிறக்கம் செய்துக் கொண்டு படித்துள்ளார்.
நேரம் கிடைக்கும் சமயங்களில் பழைய வினாத்தாள்களையும் டவுன்லோட் செய்துக் கொண்டு இரவில் எழுதி பயிற்சி செய்திருக்கிறார்.
தொடர்முயற்சியின் காரணமாக, கேரளா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் தேர்வில் ஸ்ரீநாத் வெற்றி பெற்று கேரள வருவாய்த் துறையில் வேலைக்கு அமர்ந்தார்.
தொடர்ந்து குடிமைப் பணிக்கு படித்து வருகிறார். அதில், 3 முறை தோல்வி அடைந்தார்.
ஆனாலும் தனது விடா முயற்சியால் இப்போது முதல்நிலைத் தேர்வில் 82 சதவீத மதிப்பெண்ணுடன் வென்றுள்ளார்.
தற்போது முதன்மைத் தேர்வையும் எழுதி வருகிறார்.
மனதில் வைராக்கியம் இருந்தால் சாதிப்பதற்கு ஏழ்மை தடையே இல்லை என்பதற்கு ஸ்ரீநாத் ஒரு உதாரணம்.
.
