Connect with us

    நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்தது கோர்ட்; ஏன் தெரியுமா..???

    Cinema

    நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்தது கோர்ட்; ஏன் தெரியுமா..???

    சேவை வரி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷாலில் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பினர்.

    ஆனால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், கடந்த 2018ஆம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது.

    அப்போது, 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை.

    இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சாட்சி மற்றும் ஆவணங்களை வைத்து பாா்க்கும்போது சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீஸை நடிகா் விஷால் செயல்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

    அதேவேளையில், இந்த வழக்கை சேவை வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த பின்பு சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீஸை விஷால் செயல்படுத்தி உள்ளாா்.

    சேவை வரித்துறையில் அவா் ஆஜராகாததாது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுகிறது.

    எனவே, நடிகா் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!